இத்தாலியின் போர்டோ செர்வோ (Porto Cervo) பகுதியில் உள்ள கடற்கரையிலேயே குறித்த பெண் திமிங்கலம் கரை ஒதுங்கியது.
திமிங்கலம் உயிரிழந்திருக்கலாம் என மக்கள் கருதிய நிலையில் அதை வாகனம் மூலம்
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
பிரேத பரிசோதனையில் அது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மேலும் திமிங்கலம் வயிற்றை சோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம் அதன் வயிற்றுக்குள் 22 கிலோ அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன.
பிளாஸ்டிக் தட்டுகள், மீன் பிடிக்கும் வலைகள், சாக்கு குப்பைகள் போன்றவை வயிற்றில் இருந்தன.



